"தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்" - தலைமை செயலாளர் சண்முகம்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
x
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரனோ தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம் , டிஜிபி திரிபாதி, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் அதிகாரிகள் 
கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பு பணிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும் என்று  கூறினார். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்