தமிழகத்தில் மேலும் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 871 பேருக்கு தொற்று உறுதியானது.
x
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக உயர்ந்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 71 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும், 5ஆயிரத்து 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 119 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆயிரத்து 278 ஆக உயர்ந்து இருக்கிறது. 52 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் புதிதாக 993 பேருக்கு பாதிப்பு - திருவள்ளூரில் 11 பேர் உயிரிழப்பு 

சென்னையில் மேலும் 993 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 878 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் மேலும் ஆயிரத்து 160 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 10 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னைக்கு அடுத்தப்படியாக திருவள்ளூரில் 11 உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்