ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் அமைப்பு செயல்பாட்டில் உள்ளதா? - சென்னை உயர் நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா என விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் அமைப்பு செயல்பாட்டில் உள்ளதா? - சென்னை உயர் நீதிமன்றம்
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்து, விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் கைதிகளாக உள்ள நளினி -முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும், வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்க கோரி, நளினியின் தாய் பத்மா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், அவர்களை பேச அனுமதித்தால், வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிக்கும் என தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், முருகனின் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர, அமெரிக்க தேர்தல் தொடர்பாகவா பேச போகிறார்கள் என அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து, 2015ஆம் ஆண்டு வரை மட்டுமே அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை, தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்து, ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்