மூணாறு நிலச்சரிவு: தேயிலை தோட்ட நிர்வாகமே காரணம் - ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூணாறு நிலச்சரிவு: தேயிலை தோட்ட நிர்வாகமே காரணம் - ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை
x
கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி  மக்கள் அதிகாரம் அமைப்பினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழப்புக்கு காரணம் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் அலட்சியமே எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்,.  தமிழக மற்றும் கேரள அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார பாதுகாப்பிற்கு உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் இது தொடர்பாக மனு ஒன்றையும் அவர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்