ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - 4 பயணிகளை பிடித்து அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிபிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - 4 பயணிகளை பிடித்து அதிகாரிகள் விசாரணை
x
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த விமான பயணிகள் 4 பேரிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த உதயன், நூருல், தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜா, சிவகங்கையை சேர்ந்த பாஸ்கர் ஆகிய 4 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளா தங்க கடத்தலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்