சென்னையில் கஞ்சா மொத்த விற்பனை - பெண் உட்பட 4 கஞ்சா வியாபாரிகள் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து சென்னை வண்ணாரப் பேட்டையில் மொத்த விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கஞ்சா மொத்த விற்பனை - பெண் உட்பட 4 கஞ்சா வியாபாரிகள் கைது
x
வட சென்னை பகுதிகளான வண்ணாரப்பேட்ட, ராயபுரம் திருவொற்றியூர், புதுவண்ணாரப் பேட்டை, எண்ணூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது. இது தொடர்பாக நாள்தோறும்  கஞ்சா விற்பவர்களை கைது செய்வது, கஞ்சா பறிமுதல் செய்வது தொடர் கதையான நிலையில்,  வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலக்ஷ்மி,  உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான  ஒரு தனிப்படை அமைத்து  உத்தரவிட்டார். த​னிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில், ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த பூஞ்சோலை என்பவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்த கொள்முதல் செய்து சென்னையில் சில்லறை வியாபாரம் மேற்கொண்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில்,  கடந்த 3 வாரங்களுக்கு முன்பு பூஞ்சோலை ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போன் அழைப்புகளை வைத்து, வட சென்னை பகுதியில் சில்லறை விற்பனையில் ஈடுபட்ட, செங்குன்றம் பொத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ், அவரது கூட்டாளிகளான அஜித்குமார் மற்றும் எட்வின் ராபர்ட் ஆகியோரை தனிப்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 3 அடி நீளமுள்ள பட்டாக்கத்தி, கஞ்சா விற்பனை செய்த ஒருலட்சத்து 11 ஆயிரம் பணம், மற்றும் 3 கிலோ கஞ்சாவையும் தனிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா விற்பனைக்கு உதவிய சசிகலா உள்பட 4 பேரும் வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்