ரிஷிவந்தியத்தில் புதிய அரசு கலை கல்லூரி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ரிஷிவந்தியத்தி​ல் புதிய அரசு கல்லூரி துவக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரிஷிவந்தியத்தில் இருபாலர் படிக்கும் வகையிலான கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார். மேலும், கல்வராயன் மலையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்