இலங்கை அங்கட லொக்கா பயண விவரம் குறித்து விசாரணை - குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை

மதுரை விமான நிலையத்தில், இலங்கை தாதா அங்கட லொக்காவின் பயண விவரம் குறித்து குடியேற்றத்துறை அதிகாரிகளிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர்.
இலங்கை அங்கட லொக்கா பயண விவரம் குறித்து விசாரணை - குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை
x
சிபிசிஐடி டி.எஸ்.பி பரமசாமி, ஆய்வாளர் கவிதா தலைமையில் 4 பேர் கொண்ட குழு, மதுரை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற துறை அதிகாரிகளிடம், விசாரணை செய்தனர். அங்கட லொக்கா பயண விவரம் குறித்து இரண்டரை மணி நேரம் அவர்கள் விசாரணை செய்தனர். இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் பதிவுகளில், ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே விமான நிலையத்தில் இருப்பதாகவும், அங்கட லொக்கா மதுரைக்கு வருகை புரிவதற்கு அளித்த ஆவணங்கள் அனைத்தும், சென்னையில் உள்ள வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்தின் ஒப்புதலுக்கு பிறகே பெற முடியும் என்பதால், அனுமதிக்கு பின்னர் விசாரணை தொடரும் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்