"இ பாஸ் நடைமுறை மனித உரிமை மீறல் என புகார்" - தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

மத்திய அரசு உத்தரவை மீறி இ பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறிய செயல் என அளித்த புகாருக்கு, நான்கு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
x
தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் அரசியல் சாசன உரிமையை இ பாஸ் மூலம் தமிழக அரசு தடுப்பதாகவும் அந்த உரிமையை மீட்டுத் தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர்  துரை, ஜெயசந்திரன் இது சம்பந்தமாக நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்