அங்கொடா லொக்கா உயிரிழப்பு விவகாரம் - விமான நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை
இலங்கை கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அங்கொடா லொக்காவிற்கு அடைக்கலம் கொடுத்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, இலங்கையிலிருந்து மதுரைக்கு வரும் நபர்களை வரவேற்க அடிக்கடி விமான நிலையம் சென்று வந்துள்ளார். இது குறித்து கார் ஓட்டுநர் ஒருவர், அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார், மதுரை விமான நிலையத்தில், விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், சிபிசிஐடி போலீசார் விமான நிலையத்தில் பதிவான CCTV கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர்.
Next Story