"பழ வியாபாரியிடம் லஞ்சம்?": காவல்துறை மறுப்பு - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் சர்ச்சை
சேலம் தாதகாப்பட்டி பகுதியில் வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.
சேலம் தாதகாப்பட்டி பகுதியில் வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரோந்து வாகனத்தில் அங்கு செல்லும் காவலர் ஒருவர் வாகனத்தில் அமர்ந்த படியே அங்கு வாழைப்பழம் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரை அழைத்து , அவரிடமிருந்து இருந்து லஞ்சம் பெறுவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது., அதில், 200 ரூபாய் பணத்தை காவலர் வாங்கிச்சென்றதாக வியாபாரி கூறியதும் பதிவாகியுள்ளது,. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர், அந்த பழ வியாபாரியிடம் மாநகராட்சி சார்பில் வழங்கிய ரசீது மட்டுமே பெறப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்
Next Story