கன்டெய்னர்களில் வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் - மின்னணு ஏலத்தில் எடுத்த ஐதராபாத் நிறுவனம்

சென்னை மணலியில் இருந்து 10 கன்டெய்னர்கள் அமோனியம் நைட்ரேட் ஐதராபாத்திற்கு அனுப்பப்பட உள்ளன.
கன்டெய்னர்களில் வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் - மின்னணு ஏலத்தில் எடுத்த ஐதராபாத் நிறுவனம்
x
தற்போது 37 கன்டெய்னர்களில் 740 டன் அமோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள வேதி கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மோனியம் நைட்ரேட் தென் கொரியாவில் இருந்து கரூரைச் சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் 2015 ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இன்றி இறக்குமதி செய்தது. அதனை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் மணலில் உள்ள சுங்கத்துறை சேமிப்பு கிடங்கில் பாதுகாத்து வைத்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2019 நவம்பர் மாதம் அளித்த தீர்ப்பில் அம்மோனியம் நைட்ரேட் முழுவதையும் மின்னணு ஏலத்தில் விட சுங்கத்துறை அறிவுறுத்தியது. அதனடிப்படையில் தற்போது ஐதராபாத் நிறுவனத்திற்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.  ஐதராபாத் செல்லவுள்ள 10 கன்டெய்னர்களும், வேதி கிடங்கு அதிகாரிகள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐதராபாத் அனுப்பி வைக்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்