அங்கொடா லொக்கா விஷம் கொடுத்து கொலையா? - சிபிசிஐடி விசாரணை

இலங்கை தாதா அங்கொட லொக்காவின் பிரேதப் பரிசோதனை சான்றிதழில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அங்கொடா லொக்கா விஷம் கொடுத்து கொலையா? - சிபிசிஐடி விசாரணை
x
இலங்கை தாதா அங்கொட லொக்காவின் பிரேதப் பரிசோதனை சான்றிதழில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கொட லொக்காவின்  விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ரசாயன அறிக்கை வெளியான பின்னரே  மரணத்திற்கான காரணம் குறித்த முடிவுக்கு வர முடியும் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. 

இலங்கை தாதா அங்கொடா லொக்கா உயிரிழந்த விவகாரம் - கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனு 

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரத்தில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. தாதா அங்கொடா லொக்காவின் காதலி அம்மானி தான்ஞி, வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்ட சிபிசிஐடி போலீசார், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு வரும் புதன்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்