புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு
x
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 907 ஆக உயர்ந்து இருக்கிறது . இன்று  5 ஆயிரத்து 43 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் . இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 618 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மேலும் 118 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. மொத்தம் 53 ஆயிரத்து 481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மேலும் 986 பேருக்கு பாதிப்பு 

சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இன்று 986 பேருக்கு தொற்று உறுதியானது. 869 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 11 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 897 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்