ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர் - பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை

ஊரடங்கால் போதிய வருமானமின்றி தவித்து வந்த பூக்கடை வியாபாரி ஒருவர் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.
ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர் - பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை
x
திருச்செந்தூர் முருகன் கோயிலின் முன்பு ஐயப்பன் என்பவர் பூக்கடை ஒன்றை நடத்தி வந்தார். ஊரடங்கால் கோயில்கள் பூட்டப்பட்டதால் இவர் கடையும் அடைக்கப்பட்டு வருமானம் இல்லாத சூழல் இருந்தது. ஏற்கனவே வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர், மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். தொடர் மன உளைச்சலுக்கு ஆளான அவர், விஷம் குடித்து விட்டு பைரவர் கடற்கரை அருகே விழுந்து  உயிரிழந்தார். இவரின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்