நிதி மோசடி புகாரில் பிரபல தயாரிப்பாளர் போலீசார் முன் ஆஜர்
ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் தொடங்கி தன்னிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் நீதிமணி மேனகா மற்றும் ஆனந்த் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் தொடங்கி தன்னிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் நீதிமணி மேனகா மற்றும் ஆனந்த் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து விசாரணையில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ராமநாதபுரம் போலீசார் விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பினர். இதையடுத்து, ஞானவேல்ராஜா, ராமநாதபுரம் துணை கண்காணிப்பாளர் வெள்ளைதுரை முன்பு ஆஜரானார்.
Next Story