வேலூரில் ஹவாலா பணப்பரிமாற்றமா? - திடீரென நடந்த சோதனையால் பரபரப்பு

ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் வேலூரில் ஒருங்கிணைந்த குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்
வேலூரில் ஹவாலா பணப்பரிமாற்றமா? - திடீரென நடந்த சோதனையால் பரபரப்பு
x
சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வேலூர் சார்ப்பனாமேடு, கலாஸ்பாளையம் சஞ்சீவிபிள்ளை தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஒருங்கிணைந்த குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல் துறையினர் வீட்டில் இருந்த கணினி, எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்