இலங்கை தாதா உயிரிழந்த விவகாரம் - போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் சிக்கின
இலங்கை தாதா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் வீட்டில் சிக்கின.
இலங்கை தாதா அங்கொடா லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிவகாமி சுந்தரியின் வீட்டில் இருந்த தாதாவின் பாஸ்போர்ட்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தாதா துபாய் தப்பிச் செல்வதற்கும், போலியான ஆதார்களை உருவாக்குவதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களுக்கெல்லாம் சிவகாமி சுந்தரி மூளையாக செயல்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. மேலும் சிவகாமி சுந்தரி டூவீலருக்கான எண்ணை காருக்கு பயன்படுத்தியதும் தெரியவந்த நிலையில் போலீசார் அதுதொடர்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story