சினிமா தயாரிப்பாளர் சங்க மோதல் குறித்த விவகாரம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நலத் திட்டங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நலத் திட்டங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சினை தொடர்பாக அரசு சமரச முயற்சியில் ஈடுபடுமா என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, இரு தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தைக்கு அரசிடம் கோரிக்கை வைத்தால் அரசு தலையிட்டு சுமுகத் தீர்வு காணும் என்றார்.
Next Story