கள்ளச்சாவி போட்டு டூவீலர் திருட்டு - கொள்ளையரின் சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனங்களை கொள்ளையர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கள்ளச்சாவி போட்டு டூவீலர் திருட்டு - கொள்ளையரின் சிசிடிவி காட்சி வெளியீடு
x
சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் நகர் முதலாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் அசோக்குமார். இவர் தனது வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார். காலை எழுந்து பார்த்த போது வண்டி மாயமானது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் 3 பேர் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை ஆதாரமாக வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்