"வேளாண் மண்டலம் : விதிகள் வகுக்கப்படவில்லை" - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விதிகள் எதுவும் இன்னும் வகுக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
x
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விதிகள் எதுவும் இன்னும் வகுக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டதை சேர்ந்த ஜீவகுமார் என்பவர்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் மணல் குவாரிகள் செயல்படுவதற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேளாண் மண்டலங்கள் தொடர்பாக விதிகள் உள்ளதா?என கேள்வி எழுப்பினர். அப்போது வேளாண் மண்டலங்கள் தொடர்பாக விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 2 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்