மீன்கடையை காலால் எட்டி உதைத்த பேரூராட்சி ஊழியர்கள்
விழுப்புரம் மாவட்டம் வளவனூரில், ஊரடங்கு விதிமுறைகள் குறித்து, ஆய்வு செய்த பேரூராட்சி ஊழியர்கள், சாலையோரம் மீன்கடை வைத்திருந்த பெண்ணை கடையை அகற்ற கூறியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூரில், ஊரடங்கு விதிமுறைகள் குறித்து, ஆய்வு செய்த பேரூராட்சி ஊழியர்கள், சாலையோரம் மீன்கடை வைத்திருந்த பெண்ணை கடையை அகற்ற கூறியுள்ளனர். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே காலால் கடையை எட்டி உதைத்தனர். இதில் மீன்கள் அனைத்தும் சாலையில் சிதறின. தகவலறிந்து அங்குவந்த போலீசார், அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Next Story