உணவு டெலிவரி செய்வது போல மது விற்பனை - 2 பேர் கைது
சென்னை எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
சென்னை எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஹரி மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய 2 பேர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் 235 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். உணவு டெலிவரி செய்வது போல நடித்து இவர்கள் சென்னையில் மதுவிற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
Next Story