கொசு உற்பத்தி செய்தால் புதிய அபராதம் - வரும் 16ஆம் தேதி முதல் அமல்

சென்னையில் கொசு உற்பத்தில் செய்தால் 100 ரூபாய் முதல் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கொசு உற்பத்தி செய்தால் புதிய அபராதம் - வரும் 16ஆம் தேதி முதல் அமல்
x
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய அபராத தொகை பட்டிலில் கொசு உற்பத்திக்கு காரணமான இடங்களின் உரிமையாளர்களுக்கு முதல் மூன்று முறை குறைந்தபட்சம் 100, மற்றும் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறு  சிறு கடைகளுக்கு 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 500 ரூபாய் முதல் 15 ஆயிரம் வரையும் ஆயிரம் மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையும் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும் 5 ஆயிரம் சதுர அடிக்கு குறைவான புதிய கட்டுமான இடங்கள் உள்ள பகுதிகளில் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையும், உணவகங்களுக்கு  5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையும் வணிக வளாகங்கள், அரசு கட்டடங்கள் தொழிற்சாலைகளுக்கு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும், 50 படுக்கைகளுக்கு கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும் 150 படுக்கைக்கு மேல் உள்ள மருத்துவமனைகளுக்கு ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த அபராதம் விதிப்பு வருகிற 16ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்