"தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது" - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்

தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை தற்போது குறைந்து வரும் நிலையில், மக்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை  தற்போது குறைந்து வரும் நிலையில், மக்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை குறித்து அவர் இன்று ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்தார். திருச்சியில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை என்றார். கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம் என்றும், அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று படிப்படியாக குறையும் என்றும் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
------

Next Story

மேலும் செய்திகள்