காணொலி காட்சி வழியாக மக்கள் குறைதீர் கூட்டம் - மக்கள் கூட்டம் வருவதை தடுக்கும் வகையில் புதிய முயற்சி

கொரோனா ஊரடங்கு எதிரொலி காரணமாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி வழியாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
x
கொரோனா ஊரடங்கு எதிரொலி காரணமாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி வழியாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குறைதீர்க்கும் கூட்டத்துக்கு பதிலாக, மனுக்களை வாங்க மனு பெட்டி வைக்கப்பட்டது.   இதனையடுத்து, மனு அளிக்க அதிக அளவில் கூடியதால், காணொலி காட்சி வழியாக கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  திங்கட்கிழமைகளில் காலை 10.30 முதல் மதியம் 1.30 வரை காணொலிகாட்சி வாயிலாக  கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்