காதலியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு - காதலியின் தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்

தனது காதலியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் ஆத்திரமடைந்த காதலர் காதலியின் தந்தையை கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் தென்காசியில் அரங்கேறியுள்ளது.
காதலியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு - காதலியின் தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்
x
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் கிராமத்தை சேர்ந்த 27 வயது முருகராஜ் குடும்பத்திற்கும், வடகரை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் குடும்பத்திற்கும் நடந்த வாய்த்தகராறு முற்றி, வெட்டுக்குத்தில் முடிந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையநல்லூர் போலீசார், காயம் அடைந்த நாகராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்தார். மற்றொருவரான முருகராஜ் உடலில் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் மோதல் நடந்தது தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் கிராமத்தை சேர்ந்த 27 வயது முருகராஜ் ஜேசிபி ஆபரேட்டராக இருந்து வருகிறார்.

வடகரை கிராமத்தில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த முருகராஜ், பக்கத்து வீட்டு பெண் 23 வயது சுப்புலட்சுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சுப்புலட்சுமியின் பெற்றோர் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். 
இதனை அறிந்த முருகராஜ் காதலி சுப்புலட்சுமியுடன் ஒன்றாக இருந்த புகைப்படத்தை அவரது பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆத்திரமடைந்த சுப்புலட்சுமியின் தந்தை நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், முருகராஜியின் சொந்த ஊரான கண்மணியாபுரம் கிராமத்திற்கு சென்று தகராறு செய்தாக கூறப்படுகிறது.

இருதரப்பிற்கும் நடந்த வாக்கு வாதம் பின்னர் மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதில் முருகராஜ், கட்டையால் தாக்கியதில், சுப்புலட்சுமியின் தந்தை நாகராஜ் இரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாகராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதலன் முருகராஜ் கழுத்து மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் நடந்த இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்