சென்னையில் ரவுடி பாட்டில் மணி குண்டர் சட்டத்தில் கைது
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான பாட்டில் மணியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான பாட்டில் மணியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் சூர்யா என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாட்டில் மணி என்ற ரவுடி தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்து தாக்குதல் நடத்தியால் பாட்டில் மணி மீது குண்டர் சட்டம் பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story