வாடகை வீட்டை காலி செய்ய நிர்ப்பந்தம் - வாடகைதாரர் தீக்குளித்து தற்கொலை

புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
x
விநாயகபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்த தொழிலாளி சீனிவாசன் மீது வாடகை பிரச்சினை தொடர்பாக,
வீட்டு உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைக்கு, தொழிலாளி சீனிவாசனை போலீசார் அழைத்துள்ளனர். போலீஸ் விசாரணையால் மனம் உடைந்த தொழிலாளி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். 85 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளரும், போலீசும் தன்னை அடித்து துன்புறுத்தியால், தற்கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக
புழல் காவல்நிலைய ஆய்வாளரை பணியிடைநீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்