கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம் - நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் துவங்க உத்தரவு

மாநிலம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை துவங்குவதற்கு உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம் - நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் துவங்க உத்தரவு
x
தமிழகத்தில்,  109 அரசு கலை அறிவியல்  கல்லூரிகளில் 92 ஆயிரம் ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், மூன்று லட்சம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர், இந்த நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்-லைன் வழியில் வகுப்புகளை துவக்குவதற்கும் உயர் கல்வித்துறை முழுவீச்சில் ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி சென்னை பல்கலைக் கழகம்,  தனது எல்லைக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும்  நாளை முதல் முதுகலை வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில் , நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்  அதிவேக இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக பாடப்பொருள் குறித்த வீடியோக்களை  அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்