திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள 10 சாலைகளை இன்று முதல் 14 நாட்களுக்கு அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
x
திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ள நிலையிலும், அதனை சுற்றிலும் உள்ள சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூ, காய்கறி மற்றும் மளிகைப்பொருட்கள் விற்பனை கடைகள் இயங்கி வந்தன இந்த நிலையில் பூ வியாபாரிகள் 98 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள 10 சாலைகளை இன்று முதல் 14 நாட்களுக்கு அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது, இதனை தொடர்ந்து, நெல்பேட்டை, பாலக்கரை  மற்றும் பால்பண்ணை சாலைகள் தகரம் வைத்து அடைக்கப்பட்டது., இருந்த போதிலும், காந்தி மார்க்கெட் பின்புறம் உள்ள இறைச்சிக் கடைகள் மட்டும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செயல்படும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்