காதல் கணவரோடு சேர்த்து வைக்க கோரிக்கை - சீரியல் நடிகை காவல் நிலையத்தில் புகார்

எடப்பாடியில், காதல் கணவனோடு சேர்த்து வைக்க கோரி சீரியல் நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
காதல் கணவரோடு சேர்த்து வைக்க கோரிக்கை - சீரியல் நடிகை காவல் நிலையத்தில் புகார்
x
வள்ளியூரை சேர்ந்த, இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஷீலா என்ற சீரியல் நடிகையை எடப்பாடியை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார், சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சவுந்தரராஜனுக்கு அவரது பெற்றோர்கள் மற்றொரு திருமணத்தை நடத்தி வைக்க முயற்சி செய்வதாகவும், அதனை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் ஷீலா எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால், நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடிக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.,

Next Story

மேலும் செய்திகள்