சிறிய கோயில்களில் பக்தர்கள் அனுமதி - அதிகாலை முதல் கோயில்களில் பூஜை

ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறிய கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சிறிய கோயில்களில் பக்தர்கள் அனுமதி - அதிகாலை முதல் கோயில்களில் பூஜை
x
ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறிய கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வி.கே புரம் அம்பாசமுத்திரம் நகராட்சி பகுதிகளிலும், சங்கர் நகர், நாங்குநேரி, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிகளிலும் உள்ள சிறிய கோயில்கள் அதிகாலையில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் முக கவசம் அணிந்து, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து, சமூக இடைவெளியுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 4 மாதங்களுக்கு பிறகு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்