ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.
ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு
x
பல்வேறு மாற்றங்களுடன் மத்திய பாஜக அரசு, தேசிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு, நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்து டுவிட்டர் பதிவு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு என்றும், கட்சிக்குள் பேசி இருக்கலாம், ஆனால், வெளியில் பேசினால் முதிர்ச்சி இன்மை என்றும் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதேபோல், ஜனநாயகம் என்பது அனைவரின் கருத்துக்களையும் கேட்டு மதிக்கப்படுவதாகும் என கரூர்  எம்.பி. ஜோதிமணி ட்வீட் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, ''ஒரு லைன்... ஒரு ட்வீட்... இவ்வளவு பெரிய புயலா'' என நடிகை குஷ்பு சூசகமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 
''நான் யாருக்கும் தலை ஆட்டும் ரோபோவாக, கைப்பாவையாக இருக்க மாட்டேன் என குஷ்பு கூறியுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்