"35 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் கைது"- கைரேகையால் மதுரை போலீசாரிடம் சிக்கினார்

தமிழகம் முழுவதும் 35 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன், கைரேகையால் மதுரை போலீசாரிடம் சிக்கினார்.
35 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் கைது- கைரேகையால் மதுரை போலீசாரிடம் சிக்கினார்
x
தமிழகம் முழுவதும் 35 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன், கைரேகையால் மதுரை போலீசாரிடம் சிக்கினார். சிவகங்கையில்,கொலை செய்யப்பட்ட வழக்கில் வெள்ளைச்சாமி என்பவரை பிடித்து, போலீசார் விசாரணை செய்தனர். அவரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. சந்தேகமடைந்த போலீசார், இவர் மீது ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என கண்டறிய,  கைரேகை ஆய்வு செய்தனர். அப்போது தமிழகம் முழுவதும் சுமார் 35க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் வெள்ளைச்சாமி ஈடுபட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்