சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை - பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழைநீர்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, குரோம்பேட்டை பகுதிகளில் மழை பெய்தது.
x
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, குரோம்பேட்டை பகுதிகளில் மழை பெய்தது. சென்னை சென்ட்ரல், பாரிமுனை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் பல்வேறு இடங்களிலும், மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் வெயில் அதிகமானதால், கடல் காற்று காரணமாக மழை பெய்ததாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்