12-ம் வகுப்பு மறுதேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது - நாளை மறுநாள் முடிவுகள் வெளியாகும் என தகவல்

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த மறு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கி உள்ள நிலையில், முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
x
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த மறு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கி உள்ள நிலையில், முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி நடந்த கடைசி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு, நேற்று  மறுதேர்வு நடைபெற்றது.  800 பேர் தேர்வெழுத அனுமதி சீட்டு பெற்ற நிலையில், 300 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் . இந்த நிலையில் 300 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இன்று காலை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது

Next Story

மேலும் செய்திகள்