சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மேலும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மேலும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கை விசாரிக்க டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களுக்கு உதவிய மதுரை சிபிஐ அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிக்கும் நோய் தொற்று உறுதியானது. இவர்கள் அனைவருக்கும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவலர்கள் முருகன், முத்துராஜூக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 2 காவலர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story