கைதாகி , ஜாமீனில் வெளியே வந்த சூர்யா தேவிக்கு கொரோனா - தலைமறைவான சூர்யா தேவிக்கு போலீஸ் வலைவீச்சு

நடிகை வனிதா மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் , அவர் தலைமறைவாகி இருப்பதாக சுகாதார துறை அதிகாரிகள் போலீசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
கைதாகி , ஜாமீனில் வெளியே வந்த சூர்யா தேவிக்கு கொரோனா - தலைமறைவான சூர்யா தேவிக்கு போலீஸ் வலைவீச்சு
x
இணையத்தில் நடிகை வனிதா மீது அவதூறு பரப்பியதாக , கடந்த சில நாட்களுக்கு முன் சூர்யா தேவி கைது செய்யப்பட்டு இருந்தார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு சூர்யா தேவி உட்பட அவரை கைது செய்ய போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 
அதன் பிறகு நீதிபதி,  சூர்யா தேவிக்கு ஜாமீன் வழங்கினார்.
இந்நிலையில் பரிசோதனை முடிவில் சூர்யா தேவி மற்றும் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இதனையடுத்து சாலிகிராமத்தில் உள்ள சூர்யா தேவியின் வீட்டிற்கு அதிகாரிகள் விரைந்தனர். ஆங்கு சூர்யா தேவியை காணவில்லை .... செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும் இயலவில்லை... இது தொடர்பாக சுதாதார துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் சூர்யா தேவியை வலை வீசி தேடி வருகின்றனர். இதனிடையே சூர்யா தேவிக்கு தனக்கு கொரோனா இல்லை என ஆவவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்