"பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்" - சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை

சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் - சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை
x
சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் பொது இடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 
ஏற்கனவே அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர்  ராமன் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்