"மின்சார சட்​டத் திருத்த மசோதா: திரும்ப பெறுங்கள்" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
மின்சார சட்​டத் திருத்த மசோதா: திரும்ப பெறுங்கள் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்
x
மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மசோதாவானது தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை குறி வைப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல முனைகளில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் மேல், இந்தச் சுமையையும் அரசு ஏற்றத் துடிப்பதாக, கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார். எனவே மின்சார சட்டத் திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், பெயரளவில் அறிவிக்காமல், உத்தரவாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்