டாக்டர். அப்துல் கலாமின் 5-ம்ஆண்டு நினைவு தினம் - நினைவிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நினைவிடத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்துல் கலாம் நினைவிடத்தில் இன்று காலை 9 மணிக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.
Next Story