பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த 706 பேர் - 6 விமானங்களில் சென்னை வந்தனர்
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 43 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 43 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து 7 குழந்தைகள், 30 பெண்கள் உள்பட 68 பேரும், வியட்நாமில் இருந்து 3 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 72 பேரும் சென்னை வந்தனர். 6 சிறப்பு விமானங்களில் வந்த 706 பேரிடமும் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா சோதனைக்கு பின்னர், சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். வியட்நாமில் இருந்து வந்த 7 பேர் மட்டும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
Next Story