கொரோனா ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

ஊரடங்கு வருகிற 31ஆம் தேதி முடிவடைய உள்ளநிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
x
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி, வருகிற 29ஆம் தேதி காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சரின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டறிய உள்ளார். வருகிற 31ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? அல்லது தளர்வுகள் வழங்கலாமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆட்சியர்களின் யோசனை கேட்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்