மதுபான கடை வாசலில் ரவுடி தலையில் கல்லை போட்டு கொலை - மற்றுமொரு சிசிடிவி காட்சி வெளியீடு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில், வியாழக்கிழமை மதுபான கடை வாசலில் ரவுடி தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட மற்றுமொரு சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுபான கடை வாசலில் ரவுடி தலையில் கல்லை போட்டு கொலை - மற்றுமொரு சிசிடிவி காட்சி வெளியீடு
x
மதுபான கடை வாசலில் சின்னாளபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியானதன் அடிப்படையில், கோபி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்  தற்போது மற்றுமொரு வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது. அதில், அதிகாலை 4 மணியளவில்  புகை பிடித்தபடியே,  பிணமாக கிடக்கும் சரவணனை கூர்ந்து உற்று நோக்கும் கோபி, கீழே கிடந்த கல்லை தூக்கி மீண்டும் தன் முழு பலத்தோடு தலையில் போட்டுவிட்டு தப்பி ஓடுவது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி போலீசார் மற்றும் சின்னாளபட்டி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்