தங்க கடத்தல் வழக்கு : திருச்சியில் உள்ள நகை கடைக்கு கடத்தல் தங்கம் விற்பனை

கேரள தங்க கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் உள்ள நகை கடைக்கு கடத்தல் தங்கம் விற்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தங்க கடத்தல் வழக்கு : திருச்சியில் உள்ள நகை கடைக்கு கடத்தல் தங்கம் விற்பனை
x
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுவப்னா சுரேஷ், ரமீஸ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ ஒருபக்கம் விசாரிக்க மறுபுறம் சுங்க துறையும் விசாரித்து வருகிறது. ரமீஸ் கொடுத்த வாக்கு மூலத்தின் மூலம்  கடத்தப்பட்ட தங்கம் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடை மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சங்கிலி எனும் பகுதிக்கும் விற்கப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் திருச்சி நகை கடையில் சோதனை நடத்தவும் நகை கடை உரிமையாளருக்கு சம்மன் அனுப்பவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்குமாறு என்.ஐ.ஏ கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

சிறையில் அடைக்கப்பட்டார் ஸ்வப்னா சுரேஷ்  - புதன்கிழமை விசாரணைக்கு வரும் ஸ்வப்னாவின் ஜாமீன் மனு 

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் என்ஐஏ காவல் நிறைவடைந்த நிலையில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நிறைவடைந்த பிறகு 2 பேரும் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு வரும் புதன் கிழமை விசாரணைக்கு வர உள்ளது. 
விசாரணையின் போது, சுவப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் இருந்து 1 கோடி ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்