மன குமுறலை யாரிடமும் சொல்லாமல் உயிரிழந்த வடமாநில பெண் - உறவினர்களுக்கு தகவல் அளிக்க முடியாமல் அதிகாரிகள் வேதனை

வேலூரில் தனது மனவேதனையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்த வடமாநில பெண் இன்று உயிரிழந்தார்.
மன குமுறலை யாரிடமும் சொல்லாமல் உயிரிழந்த வடமாநில பெண் - உறவினர்களுக்கு தகவல் அளிக்க முடியாமல் அதிகாரிகள் வேதனை
x
சென்ற பிப்ரவரி மாதம் 22ம் தேதி , காட்பாடி ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து செல்வதாக சமூக நலத்ததுறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், பெண்னை மீட்டு  அரியூரில் உள்ள ஸ்ரீ சாய் ஸ்வாதர் கிரகா இல்லத்தில் தங்க வைத்தனர்.
விசாரணையில் அந்தபெண் நாகாலாந்தை சேர்ந்த மாமுன் என்பது தெரியவந்தது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாமுனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் அறுவை சிகிச்சை செய்வது , உயிருக்கு ஆபத்து என்றும் ஒரு வாரத்தில் அவர் மரணித்து விடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உயிருக்கு போராடிய மாமுன், இன்று உயிரிழந்தார். இறுதிவரை மாமுன் யாரிடமும் பேசாமல் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்