முதியவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை
சென்னை மயிலாப்பூரில் முதியவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மயிலாப்பூரில் முதியவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூரில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வரும் திருநாவுக்கரசு என்ற காவலாளியை மர்மநபர்கள் சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்து பணத்தை பறித்து தப்பியோடினர். அந்த காட்சி சிசிடிவி யில் பதிவானது. இந்த காட்சிகளை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், சக்திவேல், சுலைமான், தனபால் ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள், ஜாம்பஜார் பகுதியில் ரோட்டு ஓரம் வசித்து வருவதாகவும், சம்பவம் நடத்த அன்று ஓட்டேரி பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடி விட்டு, மயிலாப்பூர் பகுதியில் கஞ்சா வாங்குவதற்காக முதியவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
Next Story