குடும்ப வழக்குகளை குறைக்க பிரத்யேக குடும்ப ஆலோசனை அறை திறப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் பதிவாகும் குடும்ப பிரச்சனைகள் சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், மகளிர் காவல் நிலையத்தில் பிரத்யேகமாக குடும்ப ஆலோசனை அறையை வேலூர் சரக டிஐஜி காமினி துவக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் பதிவாகும் குடும்ப பிரச்சனைகள் சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், மகளிர் காவல் நிலையத்தில் பிரத்யேகமாக குடும்ப ஆலோசனை அறையை வேலூர் சரக டிஐஜி காமினி துவக்கி வைத்தார். மேலும் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு நூலகம் மற்றும் ஓய்வெடுக்கும் அறைகளையும் அவர் திறந்து வைத்தார், பின்னர் பேசிய அவர், காவலர்கள் ஓய்வு நேரத்தில் புத்தகங்களை படித்து மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்
Next Story