தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு பணிக்கு செல்வோர் - ஒரு மாதத்துக்கு இ-பாஸ் வழங்க ஆணை

தமிழகத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு செல்வோருக்கு ஒரு மாதத்திற்கான இ-பாஸ் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு பணிக்கு செல்வோர் - ஒரு மாதத்துக்கு இ-பாஸ் வழங்க ஆணை
x
தமிழகத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் ஆந்திராவின் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தினமும் தமிழகத்தில் இருந்து, ஆந்திரா சென்று வருகின்றனர். அவர்களுக்கு தினசரி 'இ - பாஸ்' வழங்காமல், ஒரு மாதத்திற்கு, இ - பாஸ் வழங்கும்படி, தொழிற்சாலை நிர்வாகங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று தொழிற்சாலைகள் சார்பில் விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான இ-பாஸ் வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது எனவும், தொழிலாளர்களை அழைத்து வர நிர்வாகமே வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இ-பாஸ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால்  வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்